Monday, December 26, 2011

பிராத்தனையின் இசை (பாகம் - 2)

This Article published in e-magazine "Uyirosai"(uyirmmai publications)26-12-2011 issue
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5126

பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல்
  இந்த வாரம் ஹிந்தி திரைபடங்களில் மட்டுமல்லாது, தமிழ் மொழியின் வழியான சூஃபிஇசையின் வடிவங்களையும் அதன் மூலங்களையும்
 சற்று  பார்க்கலாம்.


 2009 -ல் ராகேஷ்  ஓம்பிரகாஷ் மெஹ்ரா வின் டெல்லி-6 படத்தின்"அர்ஸியான்"
என்ற பாடலை கைலஷ்கர் , ஜாவித் அலி, குரலுடன் தபலா வும் ஹார்மோனியமும்
கூ ட்டணியிட்டு சூஃபி பாடல் கேட்பை கொண்டாட்டமாக மாற்றினர். ( பாடகர் கைலஷ்கரின் ஆளுமை பற்றி  என் வலைபக்கத்தில்  சிறு பதிவிட்டிருக்கிறேன். http://bhilalraja.blogspot.com/2010/11/kailash-kher.html  )
ரஹ்மான் இசையமைத்த மிக நீண்ட பாடல்களில் இதுவும் ஒன்று (8 .50 நிமிடங்கள்).



ARZIYAN - http://www.youtube.com/watch?v=McYnZj-EvL4
          சில மசூதி மற்றும் தர்காகளில் தொழுகை முன்னறிவிப்பிற்கு  முன் பெரிய முரசு கொண்டு ஒலி எழுப்பக்கேட்டிருக்கிறேன்.  அத்தகைய முரசொலியின்  தாள பின்னணியில்  Bose: The Forgotten Hero (2005)  படத்தில்  ரஹ்மான் தன் குரல் மற்றும் தாளம் கொண்டு உருவாகிய "ZIKAR " என்ற பாடல் மிக அபூர்வமானது.


  
ZIKAR -  http://www.youtube.com/watch?v=XQtE6JQGjlI&feature=related
"மங்கள் பாண்டே" படத்தின் இசை தொகுப்பில் உள்ள பிரபலம் அடையாத  "Al Maddath Maula "  என்ற பாடலும் இறைநேசர்களின் அடக்கஸ்தலம்  என்றழைக்கப்படக்கூடிய தர்காக்களின் பின்னணியில் அமைந்தது.

Al Maddath Maula  -http://www.youtube.com/watch?v=QkK84M6lg5E


      இந்திய இசையின் நவீனத்திற்கும்,தொழில்நுட்பத்திற்கும்அடையாளமான 
ரஹ்மான், தான் இசையமைத்த நேரடியான சூஃபி பாடல்களுக்கு எளிமையாக   சூஃபி பாரம்பரிய இசைக்கேயுரிய தபலா, நரம்பிசை மற்றும்  ஹர்மோனியதிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்காரணம், அவர் சூஃபி இசை மரபை சரியாக  உள்வாங்கி/உணர்ந்திருப்பதால்தான்.
சினகிதனே...(அலைபாயுதே), என்னுயிரே., (உயிரே), therbina ...(குரு)  இவைகளின் மூலமும் சுபி இசைதான், ஆனால் இந்திய சினிமா சம்பவங்களுக்கு பொருந்தும்படி உரு(இசை) மாற்றம் செய்திருப்பார்.

ரஹ்மானிடம் தற்போது  சராசரி சினிமா பாடலுக்கான  புனைவுப்புதுமை குறைந்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த ROCKSTAR படத்தின்  "குன் பாய குன்", பாடல்  ஜாவேத்  அலி,    மொஹித் சாஹன், ரஹ்மான் குரலில் சூஃபி இசை வரிசையில்  தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது .
இந்த பாடலை டெல்லியில் ஒருநேரடி மேடை நிகழ்சியில் ரஹ்மான் குழுவினரோடு பாடும் கண்ணொளி கீழ் காணும் சுட்டியில் ரசிக்கலாம்.





இக்கட்டுரையில் இதுவரையிலான களமும்,சூஃபி பாடல்களும்  வடஇந்தியா  மற்றும் இந்துஸ்தானி இசையின் கலாச்சாரத்தில் நிலைகொண்டவை,
தென்பகுதியிலும், தமிழகத்திலும் சூஃபிதுவம் பரவியபோது, அதனுடன் இசையும் வளந்தது குறிப்பாக தமிழகத்தில் நாகூர், மதுரை பகுதியில் சூஃபி த்துவங்களையும், சூஃபி  கலைஞர்களின் வாழ்வை இசை வடிவில் பாடி யாசிக்கும் பஃக்கீர் என்ற பிரிவினர் வசிக்கின்றனர். சூஃபி கலைஞர்களின்
நினைவிடங்கலான தர்காக்கள்தான் இவர்களின் இசை மற்றும்  வாழ்வியல்  மையங்கள்.(சுஃபி பாதைகளை குறிக்கும்  "தரிக்கா" என்ற சொல்லிலிருந்து
 உருவானது தர்கா என்ற சொல்).  இவர்கள் பெரும்பாலும் பச்சை நிற தலைப்பாகையுடன்(உருமாகட்டு) கையில் தாயிரா என்ற தோல் இசை கருவிகொண்டுபாடியபடி  தெருக்களில் யாசிப்பதுதான் இவர்கள் தொழில். சமுகத்தில் பெரும்பான்மை /வைதிக இஸ்லாம் சார்பாளர்கள் சூஃபியிசத்தை
பின்பற்றுபவர்களை  ஒருவித எதிர்ப்புணர்வுடன் அணுக காரணம், இவர்கள் இஸ்லாத்தின்  முக்கிய கடமைகளில் ஒன்றான தொழுகையை காட்டிலும்,
ஜியாரத், திஃக்ர்  போன்ற ஆழ்நிலை தியான வழிபாட்டில் ஆர்வம்கொண்டவர்கலாக
இருப்பதுதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை பஃக்கீர்களின் பாடல்களில் முக்கிய பாடுபொருள் சூஃபியிசதின் முனோடியாக கருதப்படும் அப்துல் காதர் ஜிலானி, மற்றும் நாகூர் சாகுல் ஹமிது இவர்களின் வாழ்வும், அற்புதநிகழ்வுகளும்தான்.  தமிழ்நாட்டில் முக்கிய ஆன்மிக தளமான நாகூர் தர்காவில் அடங்கியுள்ள சாகுல் ஹமீது முகம்மது நபியின் 23 -ம் பரம்பரரையை  சேர்ந்தவர்,  உ.பி.யில் மாணிகபுரில்  புலம்பய்ர்ந்து  வாழ்ந்த பெற்றோருக்கு மகனாக  பிறந்து கிழக்காசிய நாடுகளில் நீண்ட பயணம் செய்தபின் சவுதியிலிருந்து  கேரளா வழியாக தமிழகத்தின் கடற்கரை நகரான நாகூர் வந்து சேர்ந்தார்.  பல அற்புதங்களை நிகழ்த்தியவரென்று  சொல்லப்பட்டாலும்  தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரை கடும் பிணியிலிருந்து காப்பாற்றியதால் இப்போதுள்ள தர்காவும் அதன் பகுதிகளும் இந்த சூஃபி ஞானிக்கு தஞ்சை அரச வம்சத்தல் எற்படுதிக்கொடுக்கப்பட்டது. இந்தகைய நாகூரின் பின்னணியில் சமீபத்தில் இணையத்தில்கேட்க நேர்ந்த அப்துல் கனி,அஜாஹ் மைதீன்,  சபுர்மைதீன் பாபா சபீர்
என்ற மூவரின் குரலில் இந்த எளிய   மற்றும்  அற்புதமான பாடல்களை கேளுங்கள், தமிழகத்தில் பஃக்கீர்களால் பாடப்படும் பாடல்கள் எந்த சம்பிரதாய அல்லது மரபியல் இசை வடிவிற்கும் கட்டுப்படாத எளிய நாட்டுப்புற இசையை போன்றது.
(இதுவரை இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட மற்ற பாடல்களை
கேட்காவிட்டாலும், கீழ் குறிப்பிடும் பாடல்கள் தவறவிடவேண்டாம்)



http://www.youtube.com/watch?v=wXfPFxfy7ZM&feature=related


http://www.youtube.com/watch?v=VJH8rYn-ERY&feature=related

இவ்வகை பஃக்கீர்களின் இசை பாடலை இணையத்தில்மட்டுமல்லாது நேரடியாகவும் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களின் வாழ்வு
வறுமையில் நிலைகொண்டிருந்தாலும்,  இசைக்கத்துவங்கியதும்,  அவர்கள்   கண்களின்  வழி நம்பிக்கை மட்டுமே  இசையையும்  மீறி வழிகிறது. 

இக்கலைஞர்களின்    அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய பிராத்தனையிசையில்   சரணடையும்  நோக்குதான்,  எந்தவித சிறப்பு இசை பயிற்சியும், குரல் வளமும் இல்லையென்றாலும் நம்மை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது.

யா. பிலால் ராஜா.

Monday, December 19, 2011

பிராத்தனையின் இசை (பாகம் - 1)

This Article published in literary e-magazine "Uyirosai"(uyirmmai publications)19-12-2011 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5107

பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல்

   
தமிழகத்தில் சினிமா பாடல்கள் தவிர்த்த பிரபலமான  மாற்று இசை  என்று தேடினால் பக்தி பாடல்களை மட்டும்தான் பட்டியலிட முடியும் . அதிலும் கடந்த 30 வருடங்களில் T .M.S , மற்றும்  நாகூர் E .M . ஹனீபா இந்த இருவரின் பாடல்கள் இந்து, இஸ்லாமிய விழாக்களில் தவிர்க்க முடியாத  ஒலி நாடாக்களாக  இருக்கும். மத நம்பிக்கை கடந்து மட்டுமல்ல, மத நம்பிக்கையை துறந்தவர்கள் கூட இன்றுவரை ரசிக்கும் பாடல்கள் இவர்களுடையது. இந்த கட்டுரை எனக்கு கட்டயமானதற்கு காரணம், ஊரில் சிறுவயதில்  விழாக்களில் கேட்கத்துவங்கிய தமிழ்  இஸ்லாமிய பக்தி பாடல்கள் பின்பு இசையமைப்பாளர் ரஹ்மானின் சூஃபி இசை  பாடல்களின் செவிவழிப்பின்தொடரலாக என்னை ஒரு அபாரமான சுஃபி இசை வடிவத்தின் ரசிகனாக்கி இருக்கிறது. புத்தத்தில் ஜென் தத்துவங்களைபோல, போல இஸ்லாத்தில் சூஃபித்துவமும்  சுதந்திரமானது, இறைநிலை உணர்வுக்கு எந்த சம்பிரதாயங்களையும் கட்டாயப்படுதுவதிலை,  இயற்கை மீதான பார்வைக்கும், சுய சிந்தனைக்கும் ,
சம்பிரதாயங்களை கடந்தமனிதநேயத்திற்கும் முழு சுதந்திரம் கொடுப்பதுடன்,
இயற்கையையும், அன்பையும் இறை-வழியாக கொள்ளபடுவதால் அதில் வெளிப்படும் கலையும் அன்பும், பணிவுமாக மத வேறுபாடின்றி  அனைவரையும் ஆட்கொள்கிறது, மதிய கிழக்கு  ஆசிய நாடுகளை  பிறப்பிடமாக கொண்ட சூஃபி  இசைக்கான சிறிய  அறிமுகமாக இந்த கட்டுரையில்  ரஹ்மானின்  சில பாடல்களை மட்டும் அறிமுகம் செய்கிறேன். முன்னதாக சூஃபியிசம் பற்றி ஒரு சிறிய அறிமுகம், ஏழத்தாழ 10 -ம்  நுற்றாண்டில் வைத்திக இஸ்லாத்தின் சம்பிரதாய சடங்குகளை தவிர்த்து மெய்ஞான  தேடலாக  உருவானவர்கள்  சூஃபிகள்.  பொதுவாக இஸ்லாம் துறவு பற்றி போதிப்பதில்லை, ஆனால் அதிகப்படியான இறைக்காதலால்
துறவு நிலையில் வாழ்ந்த சூஃபி   மெய்ஞானிகளும் உண்டு.  அதேபோல்  இசை/ நடனம்/கவி புனைவை அடிப்படை இஸ்லாம் ஆதரிப்பதில்லை, இதற்கு காரணம் என்ன என்று சிலரிடம் கேட்டேன், அதற்கு அவர்கள் இது போன்ற கலைகள்/படைப்புகள் உண்மை  மற்றும்  வரலாற்றை அதிகப்படியான கற்பனைகள் கலந்து அதன் நோக்கை  திசைமாற்றி  விடுமென்பதால்  இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தில் இவைகளுக்கு  ஊக்கமளிப்பதில்லை என்றார்.  ஆனால் சூஃபியிசத்தில் கலைகளின் வாயிலாக இறைவன்/இயற்கையிடம் சரணடைதல் முக்கிய நிகழ்வாகிவிடுகிறது.  இன்னும் சொல்லபோனால் இது ஒரு வகை கூட்டு
வழிபாடு  போன்றது.  ( உண்மையில் சூஃபி , க்ஃவ்வாலி இசை பற்றி விரிவாக சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் இந்த கட்டுரை தொடரின் வடிவம் போதாது என்பதால், சிறிய அளவில், என்னால் ஆனவரை முயற்சிக்கிறேன்.)

பள்ளி செல்லும் வயதில், சில காலம் என் தந்தைக்கு உதவியாக அதிகாலை 5 மணிக்கு கடை திறந்து தினசரி பத்திரிக்கை விற்பனை தொடங்கும்போது, எதிர்புறம் திருமணமண்டப வாசலில் வைக்கப்பட்ட ஸ்பீக்கர் ரிலிருந்து TMS ன் பக்திபாடல்கள் ஒலிக்கும். விடிந்து கொண்டிருக்கும் அதிகாலை, கடைகளில்  வாசல்  தெளிப்பதால்  கிளம்பும்  மண்வாசனை, பால் வண்டிகாரர்களின் மணி சத்தம்( பாக்கெட் பால் கலாசாரம் பரவாத 90 ' களின் மத்தி), தினசரி நாளிதழ் கட்டை பிரிப்பதால் கிளம்பும் பேப்பர் வாசனை, ஒன்றிரண்டாக கூடும் ஆள் நடமாட்டம், வசந்த பவனில் வாங்கிய காபி வாசனை, இவைகளுடன் TMS ன் குரலும் சேரும்போது  கிடைக்கும்  புத்துணர்வு உழைப்பின் களைப்பை மறக்க செய்யும்.
இதே அலைவரிசைக்கு  என் மனதை  ஈர்ப்பது  எங்கள் பகுதியில் இஸ்லாமிய  விழாக்களில்  ஒளிபரப்பாகும்  நாகூர்  E M .  ஹனிபாவின்  பாடல்கள். எல்ல கலை படைப்புகளும்  கலைஞர்களும் கண்ணுக்குத்தெரியாத கால வட்டத்திற்கு உட்பட்டவைதான், சில மட்டும்தான் காலம் கடக்கும் கால்கள் கொண்டிருக்கும், தமிழ் பக்திபாடல் இசை சுழலில் T M S., மற்றும் நாகூர்  E . M . ஹனிபாவின் குரலுக்கு அத்தகைய கால்கள்
உள்ளதாக கருதலாம். தமிழகத்தில் இன்று வரை இஸ்லாமிய  விழாக்களில் ஹனிபாவின் பாடல்கள் தவிர்கமுடியாதது, காரணம் இவருக்கு பின் அந்த இடத்திற்கான தனித்துவ குரல்கொண்ட பாடகர்களும் பாடல்களும் கிடைக்கவில்லை.  இவர்களின் குரல் வள ஆளுமைதான் அபரமும் தனித்தன்மையும் கொண்டிருந்ததே தவிர பெரும்பாலான பாடல்களின்
மெட்டமைப்பும், இசையும், ஒலிபதிவு தரமும்   ஆர்கெஸ்ட்ரா  குழுக்களின் தரத்தில்தான் இருந்தன, இந்திய அளவில் சென்றிருக்க வேண்டிய இவர்களின்  குரல் ஆளுமை  தமிழகத்தின் 234 தொகுதிகளை
தாண்டவில்லை, அதுமட்டுமல்ல  நாகூர்  E .M   ஹனிபாவின் பாடல்கள் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமா பாடல் மெட்டுக்களின்இனத்தில் எளிதில்  சேர்வதுதானே தவிர முழுமையான  சூஃபி / க்ஃவ்வாலி  இசை வகையல்ல. (ஹனிபாவின் குரல் சினிமாவில் இளையராஜாவால் செம்பருத்தி , ராமன்அப்துல்லா ஆகிய இரு  படங்களில் பயன்படுத்தப்பட்டது.) இவைகளுக்கு பின் இஸ்லாமிய பக்தி பாடல்களின் வேறெந்த புது வடிவத்தையும், வகையினையும் கேட்காத நாட்கள் சென்றுகொண்டிருந்தன, சிறு வயதில்   படித்தலின் வாயிலாக சூஃபி, சூஃபிஇசை, போன்ற   வார்த்தைகளை பத்திரிகைகளில்  படித்திருக்கிறேன் ஆனால் அவைகளை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமோ , வாய்போ இல்லை. அதுவரை பாடல்களை  "கேட்டு " மட்டுமே பழகியிருந்த எனக்கு    ரஹ்மானின் இசை வருகைகு பின்  பாடல்களையும் இசையையும் கவனித்து
உள்வாங்கும் ஆர்வம் அதிகரித்தது. அப்போது ஒரு வார இதழில் "FIZA " என்ற இந்தி படத்தில் ஒரேஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் இசை என்றும், மற்ற பாடல்கள் அனுமாலிக் இசை என்றும் படித்ததும் ஆச்சர்யமாக இருந்தது காரணம்,  இந்திய சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளர் இசைத்த படத்தில் மற்றொருவர் இணைவது அபூர்வம்
அதிலும் அனுமாலிக், ரஹ்மானின் இசையை காப்பியடித்து தன பெயரை
போடுக்கொள்வதாக பரவலான குற்றச்சாட்டுக்கு ஆளானவர், அவர் மீது வழக்கு போடுவீர்களா?  என மீடியாக்கள் மைக்கை முன் நீட்டியபோது புன்னகையை மட்டும் பதிவு செய்தவர், இந்த படத்திற்கு  இசைய காரணம், அது ஒரு சுஃபி இசை வடிவத்திற்கான களம் என்பதாலும் ரஹ்மான்            அந்த இசை வடிவத்தில் ஆர்வம் கொண்டவரென்பதாலும் அப்பட இயக்குனரின் வேண்டுதலால் ஒப்புக்கொண்டதாக ஒரு பத்திரிகையில் படித்தேன். (ரஹ்மானின் இத்தகைய பெருந்தன்மையும், குணமும்தான் உலகின்
அனைத்து இசைவகைகளையும் உள்வாங்கவும் , அதிலிருந்து  புது பரிணாமத்துடன்
 தனக்கான நவீன இசையை உருவாக்கவும் காரணமாய் அமைகிறது.)
"FIZA " பாடல் கேட்க ஆர்வம் பற்றிக்கொண்டது, இப்போது இருப்பது போல் அந்த சமயத்தில் எங்கள பகுதில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், டவுன்லோட் சமாச்சாரங்கள் பரவவில்லை.  என் நண்பர் ஒருவரின்  மியூசிக்கல்ஸ்-ல் சொல்லி  வைத்து  ஒரு  காசெட்டில்  பதிந்து வாங்கினேன்   அதுவும் ஹிந்தி பாடல் என்றால் வெளிவந்து ஒருமாதம் கழித்துதான் கிடைக்கும், பின் என் நண்பன் ஒருவனின் வீட்டில் சோனி பிளேயர்ல் காசெட்-ஐ  ஒலிக்க விட்டேன்,  நேரமும்,  ஒலி நாடவும்  நகர,நகர  அதுவரை  இஸ்லாமிய பக்தி பாடல் என்றால்  வழக்கமாக  எதிர்பார்த்து  வைத்திருந்த    இசை பிம்பம் காற்றில் கரைந்து, புதுமையான தாளமும், குரலும் இசை கோர்ப்பும் ஒரு புது கேட்பனுபவத்தை தந்தது.
படத்தின் சூழல் ஜெயாபச்சன் தொலைந்து போன தன் மகன் ஹ்ரித்திக் ரோஷன்-ய் தேடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் மும்பையில் உள்ள புகழ் பெற்ற ஹாஜி அலி தர்காவிற்கு வரும்போது இந்த பாடல் தொடங்கும்.  இந்த பாடல்  காதர் குலாம் முஸ்தபா , முர்த்சா குலாம் முஸ்தபா , ஸ்ரீநிவாஸ் மற்றும்   ரஹ்மானால் பாடப்பட்டது. இந்த  பாடலுக்கான சூழல் வழக்கமான இந்திய சினிமாவில்  சோகமான பாடல்
 களம் ஆனால் இந்த பாடல்  எந்த துயரத்தையும்  மாற்றக்கூடிய நம்பிக்கைகளை இசைக்கிறது. 15 ம் நுற்றாண்டில் வாழ்ந்த  "சய்யத் பீர் ஹாஜி அலி ஷாஹ் புக்ஹாரி"  சூபியால்(பெரும் வணிகராக வாழ்ந்தவர்)   மும்பையில்   உருவாக்கப்பட்ட  இந்த  வணக்கஸ்தலம்  கடற்கரையிலிருந்து  பல மீட்டர் தூரம் தனித்து கடலில் அமைந்திருக்கும்,  இவ்விடத்தை சென்றடைய சிறு நடைபாதை ஒன்று  மட்டும் உள்ளது. கீழ் காணும் கண்ணோளியில்/ இணைப்பில் இந்த பாடலை கேளுங்கள். (இந்த கட்டுரையில்  குறிப்பிடப்படும்  பாடல்களையும் நிச்சயம் ஓய்வான இரவு தனிமையில், ஹெட் போன் அல்லது மியூசிக்சிஸ்டம்  கொண்டு  மொழி,  மதம்  மீதான  நம் முன்முடிவுகளை  சற்று மறந்துவிட்டு  கேட்டுப்பாருங்கள்).



 பொதுவாக  சூபி வகை பாடல்களில் தபலா, ஹார்மோனியம், தாயிரா, டோல் போன்ற வாத்தியங்கள் தான் அதிகமாக பயன்படும், இந்த பாடலிலும் அவைகள் தான் ஆனால் அவைகளின் நுண்ணிய இசை கோர்வையும்,  புதுமையான மெட்டும்  பாடகரின் குரலும் சூபி  இசையின் நவீனத்துவ தலைமுறையை துவக்கிவைகிறது. இந்திய இசையில் தபலாவின் இசை முக்கியமானது, எண்ணற்ற இந்திய சினிமா பாடல்களில் தபலா  தாளங்களை கேடிருந்தாலும்   இந்த கட்டுரை தொடரில் குறிபிடப்படும்
ரஹ்மானின் 4 சூபி வகை பாடல்களின் தபலாவின் தாளங்களை  கவனித்து பாருங்கள், மிக நேர்த்தியாக, ஒவ்வொருஒலியும்
நுட்பப்புதுமையில் கட்டமைக்கப்பட்டிருகும். அடுத்து வரும் 4 ரஹ்மானின் சூஃபி இசை பாடல் வரிகளின்  ரசனையான தமிழ் மொழி பெயர்ப்பை ராஜேஷ் என்பவரின் http://www.karundhel.com/2011/10/blog-post_10.html  தளத்தில் படிக்கலாம்)

  இதுபோன்ற சூஃபித்துவ பாடலுக்கான சூழல் இந்திய சினிமாவில் அமைவது அபூர்வம், அதிலும்  அபாரமானது ரஹ்மான் தனக்கு கிடைத்த இது போன்ற சில வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதுதான்.  அதன் பின் ஆசிய முழுதும் பெரும் செல்வாக்கு பெற்றிருத்த நஸ்ரத் பதே அலிகான் , ஆபிதா பர்வின், கைலாஷ் கெர், JUNOON Band (இந்த  குழுவின்  சூஃபி  பாடல்கள்  ராக்  இசை வடிவில் இருக்கும்)  பாடல்களை அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன். 2008 ல் வெளிவந்த "ஜோதா அக்பர்" திரைப்படத்தின் பாடல்களை கேட்டபோது மீண்டும் ஒரு அற்புதம் "கரீப்நவாஸ்"  பாடல்.  இதற்கு  பின்  இன்னும்  இரண்டு சூஃபி இசை  பாடல்கள் ரஹ்மானால்  உருவாகப்பட்டாலும் இது தான் அவரின் படைப்பாற்றலின் உச்சம்.  எனக்கு கற்பிதம்  செய்யப்படும்  கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லைஎன்றாலும், என்னில்   எப்பொழுதெல்லாம்  துன்பமும், வெறுமையும், செருக்கும் , குரோதமும்,    வெறுப்பும் உணருகின்ரேனோ, இந்த பாடலை அந்த இரவில் கேட்டல் அனைத்தும்
 வடிந்து விட உணர்ந்திருகின்றேன். பாடல் பார்க்கும்முன் அதன் சூழலை பார்த்துவிடலாம்.  இந்தியாவின்  முக்கிய முஹலாய மன்னரான  அக்பர், சுபிதுவத்தின் மீது பற்றுகொண்டவர், தனது திருமணத்திற்கு முன் ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற  அஜ்மீர்  "ஹாஜா  மொயனுட்டின் சிஷ்டி"  தர்காவிற்கு செல்கிறார், அங்கு ஓய்வான இரவு அமர்வில் இப்பாடல் பாடப்படுகிறது. ஹாஜா  மொயனுட்டின் சிஷ்டி  என்ற சூபிஞானி   11-ம் நுற்றாண்டில் ஈரானில் பிறந்தவர் இஸ்லாத்தின் முக்கிய  மெய்ஞானியாக  கருதப்பட்ட இவர்தான்  இந்தியாவில் சூஃபியிசம்  உருவாக  காரணமானவராக அறியப்படுகிறார்.  சுபியிசதில்  முக்கிய  உட்பிரிவுகள்  தரிக்கா என்றலைக்கப்படுகிறது (தரிக்கா என்றால் "பாதை" என
பொருள்படுகிறது ) இவர் பிரபலபடுத்திய காதரிதாரிகா சுபியிசத்தில்
 இசையும் ஒரு வரைமுறைக்குட்பட்ட நடனமும் கூட்டு  வழிபாட்டின்  முக்கிய நிகழ்வு, இதற்கு  ஸாம என்ற பெயருமுண்டு,   வலது  கை  மேல்புறம்  நோக்கியும்,  இடது கை பூமி நோக்கியும் வைத்துகொண்டு, இடது  பாதத்தை  நிலத்தில்  பதித்து,   வலது   பாதத்தால்  கடிகாரஎதிர் சுற்றில்   சுழன்று ஆடும் இந்த நடனம் உடலையும் மனதையும்
ஒரு வித மோன நிலைக்கு அட்படுத்தக்கூடியது. புகழ்பெற்ற பெர்சிய சூஃபி கவிஞர் ஜலாலுதீன் ரூமி (1207 - 1273 ) இத்தகைய நடன நிலையில்
இறையுணர்வுக்கு ஆட்படுவதில் விருப்பம் கொண்டவராயிருந்தார். கீழ் காணும் "கரீப் நவாஸ்" பாடலின் இறுதியில் அந்த நடனத்தை பார்க்கலாம்.



கரீப் நவாஸ் - http://www.youtube.com/watch?v=nt93yH689Dg

தமிழகத்தில் இதன் வகை சேர்ந்த இசை கலாச்சரம் பற்றியும் இன்னும் சில பாடல்கள் பற்றியும் அடுத்த வாரம் பார்(கேட்)க்கலாம்.


.