Thursday, December 25, 2014

கிடாச் சண்டை

நன்றி - சொல்வனம் இணைய இதழ் 
 
 
 
 
        காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது " வர்ரீங்களா கூடல்நகர் தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்" என்றார் என் மாமா ஆர்வமாக கிளமபிக்கொண்டே, அவர் ஆர்வத்தில் என்க்கு வியப்பேதுமில்லை, வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா , சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில்
கட்டிவிட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசகரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்பட்ட ஒருகிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு "ஆடுகளம்" படத்தின் பல காட்சிகள் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. இன்றுதான் வளர்ப்பு பிராணிகளின் சண்டை நிகழ்வை முதல்முறை பார்க்கசெல்கிறேன். அனால் வழியெங்கும் இப்படியொரு நிகழ்வுக்கான தடயம் ஏதுமில்லை.
"என்ன மாமா வழியில் ஒரு போஸ்டர் flex எதயும் காணோ",
"இல்லங்க, இது சட்டபடி நடத்த அனுமதியில்ல, போலீஸ் முறைப்படி இதுக்கு அனுமதிக்காது அதுனால விளம்பரம் இல்லாம நடக்கும் "
"அதுஎப்படி மாமா இவ்வளவு பேரு கூடுறது இந்த ஏரியா போலீஸ்க்கு தெரியாம இருக்காதே"
"தெரியு ஆனா முன்னாடியே இதநடத்துரவிங்க,ஏரியாவோட பெரிய தலைக்கட்டு எல்லா சேந்து போலீஸ்-அ பேசல்-அ கவனிச்சுருவாங்ய
இது முடியிறவரைக்கும் யாரும் அந்தப்பக்கம் வர மாட்டாங்க"
சிறிது காலத்திற்கு முன்னாளில் "கம்மாய்"ஆக இருந்திருக்கலாம் என நினைக்கவைக்க்கூடிய ஒரு தாழ்வான பொட்டல் பகுதிக்கு
வந்து சேர்ந்தோம், அந்த அதிகாலையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறு சிறு கும்பலாக அங்காங்கே கூடி நின்றுகொண்டிருந்தார்கள். வண்டியை
ஓரமாக நிறுத்திவிட்டு நெருங்கி செல்லும் போதுதான் கவனித்தேன் ஒவ்வொரு சிறு கும்பலுக்குல்லும் தடித்த கொம்புடனும், அலங்காரத் தோரணையுடனும் கடாக்கள் நின்றுகொண்டிருந்தன. shar ஆடோக்களிலும், குட்டியானைகளிலும் (TATA ASA ) விதவிதமான ஆடுக்கிடாக்கள்
வந்திரங்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கிடா வந்திறங்கியதும் அதைச்சுற்றி ஒரு கூட்டம் உடனே கூடிவிடும்.
"நம்ம ஓச்சு கெடாக்கு எதுத்து நின்ன 10 அடிக்கு தாங்கதப்பா இது"
"கலரா இருக்கணுங்கதுக்காக எதுக்கப்பா இம்புட்டு பெயிண்ட்ட மேல ஊத்தி வச்சுருக்கீக?"
"என்னடா கொம்பவெ காணோ, எதக் கொண்டிடா முட்டும்"
இதுபோன்ற சொல்லாடல்கள் அந்த வறண்ட கம்மாயெங்கும் நிரம்பத்தொடங்கின.

 
அதுவரை கசாப்பு கடைகளிலும், கிராமத்து ஆட்டுக்கிடையிலும் பார்த்த  மிகச்சாதுவான ஆட்டுஇனம் அன்று பகட்டாக அங்கு கூடியிருந்தது. கசாப்பு கடைக்காரர் கழுத்தில் கத்திவைத்து அறுக்கும்போதுகூட எதிர்ப்பு காட்ட தெரியாத இவைகள், இங்கு முரட்டு கொம்புடனும் ஒருவித திமிர் கலந்த  வலுவுடலும் கொண்டு நாம் அருகில் செல்வதற்கு ஒருவித அச்சத்தை உருவாக்கி வைத்திருந்தது. முக்கியமாக அதன் பெரிய சுருண்டு வளைந்திருந்த கொம்பின் முனைகளில் துளைகளிட்டு அதிலிலும் கயிறு கட்டி, பாதுகாப்பாக யாரவது ஒருவர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளாட்டு வகையறாக்கள் இந்த சண்டை இனத்தில் சேராது, செம்பறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. கூடியிருந்த ஒவ்வொரு ஆட்டின் விதவிதமான முரட்டு கொம்புகள்தான் என் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. உண்மையில் இவைகளுக்கும் மற்ற ஆடுகளைப்போல சராசரி அளவுள்ள கொம்புகள்தானிருக்கும், சண்டைக்காக வளர்க்க முடிவு செய்துவிட்டால் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள், பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் இப்படி மூன்றுமுறை உடைத்தபின் வருவதுதான் சண்டை கிடாக்களில் நாம் பார்க்கும் முரட்டுக்கொம்பு. உசிலம்பட்டி வட்டாரம் இப்படி முரட்டுக்கொம்பு கிடாக்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றபகுதி. அங்கிருந்த அனைத்து சண்டை ஆடுகளும் தன்னுடல் ரோமத்திலும் கொம்பிலும் விதவிதமான வண்ணங்களை பூசியிருந்தான. சில ஆட்டின் கொம்பில் அப்பகுதியின் ஜாதி,அரசியல் கட்சியின் கொடிநிறத்தை குறிக்கும் வண்ண நாடக்கள் சுற்றப்பட்டிருந்தன. பெரும்பாலானவற்றின் நெற்றியில் வட்ட மற்றும் நெடிய திலகமிருந்தது. நாமமிட்ட ஆடெதுவும் கண்ணுக்குபடவில்லை. ஏறக்குறைய ஐம்பது ஆடுகளில் இரண்டு மட்டும் பச்சை வர்ண கொம்பை கொண்டிருந்தன. சாதாரண ஆடுகளுக்கான உணவு இவைகளுக்கு போதாது, உளுந்ததூசு அரைத்த புண்ணாக்கு கடலை புகட்டவேண்டும். தினமும் நடைப்பயிற்சியும், ஏரி, கம்மாய்களில் நீச்சல் பயிற்சியும் இவைகளுக்கு அவசியம் அப்போதுதான் கொழுப்பற்ற உடலும், நிலைத்தன்மையும் (stamina) இவைகள் பெறமுடியும்.
 



 கையிலுள்ள கேமராவால் சில ஆடுகளை புகைப்படம் எடுதுக்கொண்டிருக்கும்போதே, சிலரின் "இங்க கொஞ்சம் பெரிய வாட்டமா போடுங்கப்பா" என்ற உரத்த உத்தரவால் கூட்டம் ஓரிடத்தில் வட்ட வடிவில் கூடியது, போட்டியை நடத்தும் நடுவர்குழுவில் இருவர் களத்தில் நின்றுகொண்டு வளர்ப்பாளர்கள் கொண்டுவந்து ஒப்படைக்கும் ஆடுகளில் இரண்டிரண்டாக மோதவிடதுவங்கினார்கள். சுற்றியிருப்பவர்களின் வெறிகூச்சலயும் வசைச்சொல்லையும் புரிந்துகொண்டவைபோல "மடார்" "மடார் " என்ற ஓசை தெறிக்க மோதிக்கொண்டன.  அவைகள் ஒவ்வொரு முறை மோதும் போதும் போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன, சில வலிய ஆடுகளின் தாக்குதலை தாங்கமுடியாமல் பத்துக்கும் குறைவான முட்டலில் சில பின்வாங்கி கூட்டத்திற்குள் ஓடிவரதுவங்கியது , சில சண்டைகள் நீண்டநேரம் நடந்தது ஆனால் 50 முட்டல்கள் தான் ஒருபோட்டிக்கு அனுமதி அதனையும் தாண்டி அவைகள் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று துரமாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள், அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிட தோற்றதாக அறிவிக்கப்படும். " இத கைக்கிடா விடுரதுனு சொல்லுவாங்க" என்றார் ஒருவர். சில கிடாக்கள் முர்க்க மோதலில் மூக்கு உடைபட்டு ரத்தம் வடிய வெளியேறிக்கொண்டிருந்தது. இது மனிதர்கள் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டையை ஒத்திருந்தது. மனிதன் திட்டமிட்டு மோதிகொள்கிறான். இவைகள் விருப்பமின்றி இனமோதலை நடத்திக்கொள்வதாக தோன்றியது. சுமார் ஒன்னரை மணி நேரத்திற்குள் அனைத்து கடாக்களும் மோதவிடப்பட்டு போட்டி முடிவடைந்தது. சண்டையில் வென்ற கடா உரிமையாளர்கள் வெற்றிக்கூச்சலுடன் பரிசு பணத்துடன் கிளம்ப துவங்கினார்கள், ஒரு தோற்ற கிடாக்காரர் "மாப்ள நாளைக்கு நம்மவீட்ல கறிக்கஞ்சி, அவசியம் வந்துருயா..." என்று தன் ஆடின மீதான விரக்தியை யாரிடமோ வெளிக்காட்டிக்கொண்டு கிளம்பினார், ஆனால் தோற்றாலும் வென்றாலும் அவைகள் நிச்சயம் தாளமுடியாத வலியுடனும் சோர்வுடனும்தான்  அந்த மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கும்.
 
https://www.youtube.com/watch?v=ICAyIS8z_NU&t=16s
யா. பிலால் ராஜா 

Friday, September 26, 2014

Thaikkudam Bridge (Music Band)



           நம்முடைய இசைகேட்பு கொண்டாட்டம் பெரும்பாலும் இந்திய திரைஇசை தொகுப்பை சார்ந்திருப்பதில் தவறோன்றுமில்லைதான், இந்தியாவில் வெகுஜன இசைக்கான பொதுத்தளம் சினிமாதான். இந்தியாவை  பொறுத்தவரை   திரைப்படம் சாராத  இசைத்தொகுப்போ,  இசைக்குழுக்களோ (Music Band ) திரைஇசைக்கு நிகரான இடத்தை பிரபலத்திலும்,வணிகவெளியிலும் எட்டிப்பிடிக்க முடியவில்லை.  அப்படி  ஏதோ ஒரு  இசைகுழு  வெடித்துக்கிளம்பி  வெளிவந்தாலும்  மிக சொற்பகாலத்திற்குள் காணாமல் போய்விடுவார்கள், அல்லது  அந்தக்குழு  கலைந்து  போய்விடுகிறது. வடஇந்தியாவிலாவது சினிமா இசைஅமைப்பாளர்களுக்கு இணையாக  தளார் மொஹந்தி , அபாச்சி இந்தியன், பாபா சேகல் 90களில் புகழ்பெற்றார்கள், தெற்கே  அந்த அளவிற்கு  எந்த ஒரு
ஆளுமையோ  இசைகுழுக்களோ  நிலைபெறவில்லை.சமீபகாலமாக  நான் கேட்கும் பாடல்களும் இசைத்தொகுப்பும்  எந்தவித புதுமையும்,   மனஎழுச்சியையும் எனக்குள் கடத்தவில்லை ("கடல்" தொகுப்பு தவிர்த்து), இசை கேட்பில்ஒரு வறண்ட வானிலை  நிலவும் சமயத்தில்தான்  தற்செயலாக இணையத்தில் Thaikudam bridge என்ற  Rock Band ன் "Fish Rock" பாடலை கேட்டேன், மலையாள  பாடலென்றாலும்  அட்டகாசமாக வடிவமைத்திருந்தார்கள்   அக்குழுவின் இன்னும்  சில  பாடல்களை தேடிக்கேட்டேன், அற்புதமான Music Band அக Thaikkudam Bridge  உருவெடுத்துள்ளனர், அதிலும்  கேரளாவில் இப்படி  ஒரு Rock band  உருவெடுத்து  மேடை நிகழ்வுகளை நடத்தி வருவது பிரமிப்பானது. பொதுவாக Rock  இசை வடிவம் முற்றிலும் மேற்கத்தியபாணி என்பதால் இது இந்திய இசைவடிவ நுகர்வோரை திருப்தி செய்யாது இவர்களை போல் Rock  இசையை அடிப்படையாக கொண்ட
 பல குழுக்கள் இங்கிருந்தாலும், இவர்கள்  Rock -ஐ தேர்ந்த கலப்பிசை (fusion ) வடிவில் அமைப்பதுதான் இந்த வெற்றிக்கு காரணம். Thaikkudam Bridge எனபது கொச்சினில் இந்த குழுவினர் தங்கியிருந்த இடத்தின் பெயரென்பதால் அதனையே இந்த Band ன் பெயராக வைத்திருக்கிறார்கள். 
 




அவர்கள் இணையத்தில் பதிவேற்றியுள்ள  இசைபதிவுகள் ஒளி  ஒலி தரத்தில் மிக துள்ளியாமாக இருப்பதால்  இவைகளை  தரமான ஸ்பீக்கர் வழியேதான் நிச்சயம்  கேட்கவேண்டும். sub-woofer speeker system is the best to hear. Thaikkudam Bridge-ன் சில பாடல்களை எளிய அறிமுகத்துடன் இங்கே.



 Fish Rock
இந்த குழு பழைய மலையாள திரைப்படபாடல்களைதான் பெரும்பாலும் ரீமிக்ஸ் செய்து பாடிக்கொண்டிருந்தார்கள், பின் அவர்களாகவே மெட்டமைத்து சில பாடல்களை தொலைகாட்சி மற்றும் மேடைகளில் நிகழ்த்தினார்கள்.  "Fish Rock" என்ற இந்த பாடல்தான் அவர்களுக்கு புகழை துவக்கிவைத்து.  வயலின் இசையுடன் பாடலும் பாடுகின்ற கோவிந்த் மேனன் தான் இந்த Thaikkudam Bridge  குழுவின் பிரதான தலைவர் மற்றும் மெட்டமைப்பபாளர், Vian Fernandaz என்ற Bass Guitarrist   இந்த பாடலில் இன்னொரு நாயகன். கிட்டாரை இவரின் விரல் மட்டுமல்ல, தோள் கடந்து புரளும் கூந்தலும்  வந்து வாசித்துவிட்டு போகும்போல, வாசிக்கும்  பொழுது அப்படி ஒரு உற்சாக துள்ளல் இவரிடம். பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உற்சாகத்தீ பார்ப்பவர் அனைவரின்மீதும் பற்றியெரியும். இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் தவறவிடக்கூடாத  பாடல் இதுவென்பேன்.
youtube link for better video

Appozum
இது பழைய மலையாள பாடலின் (Kadamba) நவீன வடிவம் இதன் பிரதான பாடகர் பிதாம்பரன், இவர் கோவிந்த் மேனனின் தந்தை இந்த இசைக்குழு உருவாக்கத்திற்கு முக்கிய ஊக்கம் இவருடையதுதான், இவைகளெல்லாம் மலையாள மொழியில் பாடப்பட்டாலும், இவர்களின் Music Present style  கேட்பவரை நிச்சயம் Replay-க்க  வைக்கும் .


 youtube link for better video

Haq Allah
சூபி/குவாலி வகை பாடலை இப்படி ஒரு நவீன வடிவில் கேட்டதே இல்லை, குவாலி இசையில் ஹார்மோனியத்தை தவிர்க்கவே முடியாது, நவீன சூபி இசை பாடலில் உச்சம் தொட்ட ரஹ்மான் கூட அவரின் பாடலில் ஹர்மோனியா இசையை பொதித்தே வைத்திருப்பார். ஆனால் இதில் Hollow Guitar, வயலினை மட்டும் பிரதானமாக கொண்டு மெட்டமைக்கப்பட்டிருகிறது, கிருஷ்ணன் , நிலா மாதவ் இருவரும் பாடியிருக்கிறார்கள், அதிலும் கிருஷ்ணன் படிய பல்லவியை படியெடுத்து தொடரும்  நிலா மாதவ் குரல் அனைத்து scal -ஐயும் அனாசயமாக கடக்கிறது. இடையில் 2.04 - 2.50 கணத்தில்  இசையை நீங்கள்   மறுமுறை கேட்டே ஆகவேண்டும்.


youtube link for better video

Nostalgia
ஒரு சிறு நீரோடையை பின் தொடர்ந்து செல்கிறீர்கள் சில கணத்திற்க்குப்பின் எதிர்பாராமல் நீர் பெருக்கெடுத்து ஒரு அருவியாய் உருவெடுத்தால் எப்படிஇருக்கும், அத்தகையது இப்பாடல். அர்த்தம் புரிகிறதோ இல்லையோ மலையாள மொழி உச்சரிப்பே ஒரு இசை லயம் கொண்டதுதான். மெல்லிய மலையாள மெட்டுடன் துவங்கி Guitar, Violen, Drums, Keyboard -ல் இசை தீயாய் பற்றியெரிந்த பின்தான் அணைகிறது. முதல் பல்லவி துவக்கிவைக்கும் பாடகர் சித்தார்த் மேனன், கிருஷ்ணன் மேனனின் சகோதரர் மற்றும் சென்னையில் ரஹ்மானின்
KM Music conservatory இசைக்கல்லூரியில் இசை பயின்றவர்.
youtube link for better video

Ilayaraja,Rahman Medley
இந்த இரு பாடல்களும் திரு. இளையராஜா, ரஹ்மானின் மெல்லிசைகளை அற்புதமாக ரீமேக் செய்திருக்கிறார்கள். பொதுவாக  சொல்வதற்காக  ரீமேக் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். இவைகள் "cover song" என்று தான் தற்போது அழைக்கப்படுகிறது.
(வாய்ப்பிருந்தால் இணையத்தில் உலவும் சில அற்புதமான "cover songs" பற்றி   தனியாக ஒரு கட்டுரை பதிவிடுவேன்)  
வேகம்
சில மலையாள திரைப்படங்களுக்கும் பாடல் செய்துள்ளார்கள், வேகம் என்ற மலையாள படத்தின் " Theme song"