Saturday, October 21, 2017

உமா - சிறுகதை


உமா 

தாம்பரம் தாண்டி குரோம்பேட்டை நெருங்கிக்கொண்டிருந்தது 21G, 
பிக்பாக்கெட்டுக்குக்கூட ஒருவன்  பாக்கெட்டில் கை நுழைக்க முடியாது,   நுழைத்தாலும் கை வெளியெடுக்க முடியாது காலை 
ட்டு  மணிக்கே அப்படியொரு நெரிகூட்டம் பேருந்தில்முன்னாலிருநத
பெண் சற்று எட்டி பின் வாசல்பக்கமிருந்த ஒரு பெண்ணை பார்த்து  "உமா எனக்கும் ஒண்ணு  சேத்து எடுத்துருடி ....", என்றாள்.
 "சரிடி ..." "ரெண்டு க்ரோம்பேட் குடுங்க..
உமா.... 
இந்தபெயர்என்னுள்பதிந்துசற்றேறக்குறைய 30 ஆண்டுகள் நெருங்கப்போகிறது, நன்றாக நினைவிருக்கிறது அந்த வருடம் 1988, வெற்றிகரமாக  ஐந்தாம் வகுப்பின் அட்மிசன் முடித்த கையோடு என்தந்தை வகுப்பாசிரியர்முத்துசாமிசாரிடம் டியூஷனுக்கு சொல்லி வைத்தார்.  ஒவ்வொரு   பாடத்திலும் 35 மார்க் எடுப்பதேசாதனையாக இருக்குமென்று என் பெற்றோர்முதலிரண்டுவகுப்புகளிலே  என்னை கணித்துவிட்டபடியால் 
 மூன்றாம் வகுப்பிலிருந்தே பள்ளி முடிந்தவுடன்  டியூஷனுக்கு  
துரத்திவிடப்பட்டேன்.  வகுப்பு தொடங்கியமூன்றாம் நாளே சைக்கிளில்
முன்னால் அமரவைத்து வகுப்பாசிரியர்  வீட்டுமுகவரியை கண்டுபிடித்து டியூஷன் சேர்த்துவிட்டுதிரும்பினார் என் அப்பாஆசிரியர் வீடும் எங்கள் தெருவுக்கு பக்கத்து தெருதான்.அந்த பள்ளியின் 5-C வகுப்பின் ஆசிரியரான முத்துச்சாமி சார் பற்றி ஒரு மனச்சித்திரம் 
கொள்வது இங்கு முக்கியம். குட்டையான ருவம் , நெற்றிமுழுவதும் விபூதி  பட்டை நடுவில் சிறிய குங்குமப்பொட்டுசிறு கரைகூட காணாத         வெள்ளை வேட்டிசட்டைஓரிடத்தில் தங்காத விறுவிறுநடையென   இப்போதும்நினைவில் முழுமயாகவலம்வருவார்.  வலது கையில் 
ஆறாம் விரலாய் பிறஆசிரியர்களுக்கு சாக்பீஸ் இருந்தால்,  இவருக்கு 
பிரம்புகண்டிப்புக்கு ஒரு உருவம் இருந்தா அதுவே இவருக்கு முன்னால் கைகட்டி உட்கார்ந்திருக்கும்அத்துனை கண்டிப்பானவர்.

பள்ளி துவங்கிய முதல் 10 நாள் புது சீருடை , சத்துணவுக்கு பெயர்  கொடுப்பது , மயக்கும் வாசனையுடன் புது நோட்டு புத்தகம் , வருகை பதிவேட்டில் பெயர்சேர்க்கும் வேலை என கொஞ்சம் ஜாலியாக 
வகுப்பு போய்க்கொண்டிருந்தது. ப்போதுதான் கவனித்தேன் சில 
பெற்றோர்கள்  தலைமை ஆசிரியர்அறைக்கு செல்வதும், பின் ஒருதுண்டு சீட்டுடன் வந்து  முத்துச்சாமி சாரிடம் அதனை அளித்த சிறிது வாதத்திற்குப்பின் தங்கள் பிள்ளைகளை  எங்கள்வகுப்பிலிருந்து
அழைத்துச்சென்று அருகிலிருக்கும் வேறொரு ஆசிரியரின் வகுப்பில் 
அமரவைப்பதுமாக சென்றுகொண்டிருந்தார்கள்,   எங்கள்வகுப்பில் 
மட்டும் உருப்படிகள் கொஞ்சம்கொஞ்சமாக  குறையத்தொடங்கியது.

வகுப்பில் இடவலமாக அமர்ந்திருந் அருணும், ஸ்ரீனிவாசனும்             இரண்டாம்நாளே எனக்கு நண்பர்களாயினர்அருண்  உருவததில்  சற்று
குண்டானவன் ,மற்ற பயல்கள் அடிக்கடி  இவனைகுண்டா.... தடியா..... 
சொத்துக்கு ரெடியா...." என எப்போதும் கிண்டல் செய்துகொண்டிருப்பார்கள்ஸ்ரீனிவாசன் என்னைப்போல அப்பிராணி ஆனாலும் வினயம்பிடித்தவன்தினமும் பென்சில்  டப்பா  முழுவதும்   மிட்டாய்களை கொண்டுவந்தாலும் யாருக்கும் தராமல்  தானே  தின்றுவிடுபவன்அவன்விதவிதமான இனிப்பு வில்லைகளை   சப்பி சாப்பிடுவதை பார்க்கையில் எனக்கும் அருணுக்கும்   எச்சில் ஊறும் கேட்டாலும் தரமாட்டான்.

அன்று அப்படித்தான் ஒரு மாணவனை, அவன் அப்பாவந்து சிறிது நேரம் முத்துச்சாமி  சாரிடம் ஏதோ வாக்குவாதம் செய்துவிட்டு  அவனைஅடுத்த  வகுப்பறையில் அமரவைத்து கெத்தாக நடையைகட்டினார்அன்று முத்துச்சாமி சார்சற்று  கோபமாக கரும்பலகை வந்து வருகை  41-  40 ஆக்கிவிட்டு பின் கோபமாக தலைமை ஆசிரியர் அறை                சென்றுவிட்டார்அப்போதுதான்  குண்டன் அருண் சொன்னான், "ராமசாமி சார் ரெம்ப கோபமானவராம்  பிரம்ப எடுத்தா டையுற   அளவுக்கு அடிப்பாராம்அதுனாலதான் நெறய பசங்களோட அப்பா வந்து அவுங்கள வேறவாத்தியார்ட்ட சேர்த்துவிடுறாங்க" , அவன்சொல்லும்போதே எனக்கு பயத்தில் ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வந்ததுஅதுகேட்டு மிட்டாயை சப்பிக்கொண்டிருந்த  ஸ்ரீனிவாசன் வாய்  சில நொடிகள்சைய மறந்தது, பின் கண்களில் பீதி தெறிக்க பின் அம்மிட்டாயினை மென்று விழுங்கினான். ஆண்டின் முதல் நாள் "வருகை =55" என்று ஆரம்பித்த கரும்பலகை குறிப்பு  முதல் பாடம் தொடங்கும் நாளில் வருகை = 43 என்றது.

எல்லா வகுப்பறையிலும் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் 
கொள்வது அதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு வகுப்பசிரியரும் திண்டாடுவதுஎல்லாகாலத்திற்குமான பிரச்னைதான்.  முத்துச்சாமி சார்  வகுப்பில் இருக்கும்போது யாரும் பேசமாட்டார்கள் மீறினால்  நாங்கள் கேள்விப்பட்டது போலவேபிரம்பெடுத்து பின்புறம் இரண்டு கொடுப்பார்.        அதனால் அவர் சென்ற பிறகு நாங்கள் கொண்டாடி தீர்த்துவிடுவோம் , 
அக்கம்பக்கத்து  ஆசிரியர்கள் முத்துச்சாமி சார் வந்ததும் புகார் செய்து 
விடுவார்கள் அதற்கு முத்துச்சாமி  வாத்தியார் ஒரு தீர்வு கொண்டுவந்தார்ஒரு நாள் அனைவரையும் வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்து  பதிவேட்டின் வரிசைப்படி அழைதது  ஒரு நிரல் பசங்களும் ஒரு நிரல்  பெண் பிள்ளைகளுமாக அமரவைத்தார்பொதுவாக பசங்களும் பெண்பிள்ளைகளும் பேசிக்கொள்ள  குற்றஉணர்வு கொள்வார்கள் என நம்பப்பட்ட  ஊர்ப்புற  பள்ளியின்  பண்பாட்டினடிப்படையில் இப்படிசெய்தால்வகுப்பறை  பேச்சுக்கள் குறையுமென்பது ஆசிரியர் கணக்கு.

எனக்கு இடதும் வலதுமாக இருந்த குண்டன் அருணும் , ஸ்ரீனிவாசனும் முதல் நிரலிலேயே எங்கோ இருபெண்களுக்கிடையில்அமர வைக்கப்பட்டர்இனிமேல் முன்போல் நாங்கள் பேசிக்கொள்ளமுடியாது என நினைக்கும் போது எங்களுக்கு கவலையாக இருந்தது. எனக்கு இடமாக வெங்கடேஸ்வரிஅமரவைக்கப்பட்டாள்அவளை 
குள்ளச்சி என்று பிற பிள்ளைகள் அழைத்ததற்கு நியாயமான குள்ள உருவம் , வலப்புறம் யார் அமர்வார்கள் எனபார்த்துக்கொண்டிருந்தேன் முத்துச்சாமி    சார், "உமா மகேஸ்வரி" என்றார், அவளை  அப்பொழுதுதான் முதல் முறையாக கவனித்தேன், இரட்டைசடை,நெற்றியில் சிறு பொட்டுவடிவன முகவெட்டு. ஒருவித சோகத்துடன் பையை தூக்கிக்கொண்டு வந்தமர்ந்தாள்நான் வாத்தியார் என்னை பார்க்கிறாரா  என பார்த்துக்கொண்டே ஓரக்கண்ணால் அவளை பார்த்தேன் அவள் என்னை சட்டை செய்யவில்லைவெங்கடேஸ்வரி திரும்பி உமாவைபார்த்து
"நல் வேலைடி பக்கத்துலதான்  இருக்க..." என்றாள்சிறிது நேரத்தில் சோகம் குறைந்து ஒருவித ஆறுதல் தெரிந்தது உமாவிடம்
நானும் ,அருணும்,ஸ்ரீனியும் ஒருவரை ஒருவர் எட்டி எட்டி சோகமாக பார்த்துக்கொண்டாலும்இரண்டுபிள்ளைகளுக்கு நடுவில் அமர்ந்திருப்பது   ஏனோ எனக்கு கொஞ்சம்பிடித்திருந்ததுஅதுவும் சாந்தசொரூபமான   உமாவை பார்ப்பது இன்னும் கூடுதலாக பிடித்திருந்தது.

அவர்களிருவரும் தோழிகளாக இருந்தது நல்லதுதான் இருவரும் திரும்பி பேசும்பொழுது  உமாவின்  கண்ணில் என்னுருவம் பதிய ஆரம்பித்தது. இது பெரியவிஷயம்தான் ஏனெனில் உமா எந்த ஒரு பையனிடமும் பேசுவது ...ஏன் பார்ப்பதுகூட கிடையாதுசிலசமயம் வெங்கடேஸ்வரிக்கும்  உமாவுக்கும் இடையில்நடக்கும் பென்சில்,ரப்பர்புத்தக பரிவரித்தனைக்கு பாலமாவேன்இருவரும் பேசும்போது சற்றே குனிந்து அமர்ந்து உதவுவதால் உமாவிற்கு என்மேல் சிறுகரிசனம் பிறந்திருந்ததுசில நாட்களில் அழிப்பான்பேனா என எதையாது உமா மறந்து வந்துவிட்டால்  வெங்கடேஸ்வரிக்கு பதில் என்னிடமே கேட்கதுவங்கினாள் , அவளுக்கு உதவிடுவதில் மட்டுமல்ல  எந்த பையனிடமும்  பேசாதவள் என்னிடம் பேசுகிறாலென்பதில் கூடுதல்  மகிழ்ச்சி.

ஒருநாள் முத்துச்சாமி சார் தமிழ் வகுப்பெடுக்க துவங்கும்போது "புஸ்தகத்துல எல்லோரும் 12ம் பக்கம் திறந்து வையுங்க.." என்றார் 
வகுப்பில் எல்லோரும் புத்தகத்தில் பக்கத்தை தேடிக்கொண்டிருக்க உமா 
புத்தகத்தை பையில்தேடிக்கொண்டிருந்தாள்புரிந்தது விட்டது  மறந்து  வந்துவிட்டாள்முத்துச்சாமி  சார் தண்டனை பட்டியலில் புத்தகமறதிக்கு   மூன்று   பிரம்படிகள் இதில் பால் பேதமில்லை, "யார் யாரெல்லாம் புஸ்தகத்தகொண்டுவரல எந்திரிங்க ....." சொல்லிக்கொண்டே சுவரோரம் சாய்த்திருங் பிரம்பை எடுக்க திரும்பினார், உமா இன்று மாட்டிக்கொள்ளப்போகும்பயத்தில் எந்த நொடியும் அழ   தயாராக  இருந்தாள்,  யேசிக்கவே இல்லை சடாரென என் 
புத்தகத்தை அவள் மடியில் போட்டுவிட்டு நான் எழுந்துகொண்டேன்அப்பொழுது தான் கவனித்தேன் என்னை தவிர யாரும் எழவில்லை,               கும்பலாக அடிவாங்கினால்தானே தண்டனையின் தாக்கம் குறைவாக  இருக்கும்...அன்று என் துரதிர்ஷ்டம், குண்டி  பழுத்துவிட்டது வலி தாளாமல் அழுகை வந்தது , ஆனால்  உமாவின் முன் அழுதால் வெட்கமாகிவிடுமென்பதால் அடக்கிக்கொண்டேன்.

வகுப்புமுடிந்ததும் உமா மெதுவாக "ஏன்டா இப்படி செஞ்ச .."  என்றாள்,  நான் ஒன்றும் பேசவில்லைஅப்போது அவள் கண்கள் என் மீதான 
அன்பால்நிறைந்திருந்ததுபின் வெங்கடேஸ்வரியிடம்  " அடியே இவனையும்  நம்ம கூட்டுக்கு சேத்துக்குறுவோம்.."  எனறாள்,  
இடைவேளையில்  உமா பென்சில்டப்பாவிலிருந்து நறுக்கிய மாங்காய்  துண்டுகளை எடுத்து உப்பு தடவி எனக்கும் வெங்கடேஸ்வரிக்கும் கொடுத்தாள்சிரித்துக்கொண்டே மூவரும் அதனைசுவைத்தோம்முழுநாளும் அந்த மாம்பிஞ்சின்சுவை நாவில்இருந்தது. அன்று பிரம்படியில் அடியில் உண்மையில் பழுத்ததுஎங்கள் நட்புதான்.



சில நாட்களிலேயே வகுப்பில் ஒரு பிள்ளையை பையன் ஒருவன்   தொடையில் கிள்ளி  வைத்துவிட (சாத்தியமா அது நானில்லை) அது பிரச்னைஆகி பையன்களும் பிள்ளைகளும் பழையபடி பிரித்து அமர்த்தப்பட்டனர்.  எனக்கு அது ஒரு பெருந்துயர், அமர்விடம் மாறினாலும் பார்த்தவுடன் கிடைக்கும் அவளின் புன்னகை
ஆறுதலாயிருந்ததுஇந்த சோகத்தை குண்டன் அருணனிடம் மட்டும்   ஏதோ  சொல்லத்தெரியாத  மொழியில் சொல்லுவேன்இடைவேளையின்போதுவாசலில் விற்கும் அவித்த கிழங்கையும்,  சீனி மிட்டாயும்  
வாங்கி என்னுடன் பகிரும் அருண் மட்டுமே அப்போதைக்கு எனக்கு   கொஞ்சம் ஆறுதல்.

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருக்கிறாள் எனறு   உமாவின்  அப்பா அவளையும் ஒருநாள் முத்துசாமிசாரிடம் டியூஷன் சேர்த்துவிட்டார் . வகுப்பறையில் தவறவிட்ட எங்கள் அருகாமையை  டியூஷன் மீட்டுக்கொடுக்க கதைத்துக்கிடந்தோம் மகிழ்வாய் சிலகாலம். எங்களுக்குள் பென்சில் , அழிப்பான் , அடிக்கோல் , மாங்காய் துண்டு , 
தேன்மிட்டாய் , நிறைய புன்னகை ......என பரிவர்த்தனை அதிகரித்தது.

 பள்ளி சீருடை தவிர்த்து குட்டை பாவாடை சட்டை , கவுன் அணிந்து டியூஷன் வரும்போது உமா மிகவும் அழகாகி விடுவாள். எங்களுக்கு 
டியூஷன் எடுப்பதுமுத்துசாமிசாரின் இரண்டாவது மகளான மேல்நிலைபயிலும் காயத்திரிஅக்காதான்ஒரு வெள்ளிக்கிழமை வழக்கம் பக்கத்துக்கு 
வீட்டுSolidarடிவியில் ஒளியும் ஒலியும் பார்க்க சென்றுவிட்டாள் எல்லோரையும் படிக்க சொல்லிவிட்டு பசங்க  அனைவரும் புத்தகத்தை மூடிவிட்டு கொட்டமடிக் துவங்கினர் , நான் மெதுவாக உமாவின் அருகில் சென்று
 "இந்த கலர் டிரஸ்நீ ரெம்ப அழகாருக்க.." 
"ம்ம் ....எங்க மாமா வாங்கி கொடுத்தது ...." 
சிரித்துக்கொண்டே செல்லும்போதுதான் கவனித்தேன் பல் வரிசையில் கிளிப் போன்றதொரு வஸ்துவை, 
"என்னப்பா அது..."
"அதுவா எம்பல்லு நீட்டாம வாய்க்கு வெளிய வருதுன்னு டாக்டர்ட போய் இந்த கிளிப் வாங்கி மாட்டிவிட்டாரு எங்கப்பா, இனிமே வாய்க்குள்ளயே வளருமாம்....." 
தானாக வளரும் பல்லை வாய்க்குள் வளைத்துவிடமுடியுமென்பது அன்று வியப்பாயிருந்தது. 
ஒருநாள் அவள் வீட்டில் கருப்பட்டி பணியாரம் செய்து டியூஷன் வரும்போது கொடுத்தனுப்பியிருந்தார்கள்அந்த        தூக்குவாளியை காயத்திரி அக்காவிடம் கொடுத்து " அம்மா  குடுத்து   விட்டாங்க எல்லோருக்கும்கொடுங்கக்கா ....." என்றாள். காயத்திரிஅக்கா அதனை திறப்பதற்குள் உள்அறையிலிருந்த 
பாய்ந்து வந்த முரளி (முத்துசாமி  சாரின் மூத்தமகன் +2 படிக்கும்         கிராதகன்அப்படியே தூக்குவாளியைபறித்து வாசல் வழி ஓடிவிட்டான்
காயத்திரிஅக்காள் விரட்டி சேன்று பின் வெறும்கையுடன் திரும்பினாள், ஆசைபணியாரத்தை பறிகொடுத்துவிட்டு சோகமானோம். ரோட்டில் சண்டைபோடுபவர்கள் ஏசும்  சில  கெட்டவார்த்தைகளால் மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டேன்உமாவும் நானும் வருத்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
டியூஷன் முடிந்துதெருவில் அனைவரும் மெதுவாக நடக்க துவங்கும்போது , உமா அருகில் வந்து
 "இப்போ என்கூட வீட்டுக்கு வரியா ? அம்மாச்சிட சொல்லி  உனக்குகொஞ்சம் பணியாரம் தர சொல்றேன்..." என்றாள். என் மகிழ்ச்சியைச் சொல்லவாவேண்டும்அது  பணியாரம் 
கிடைப்பதால் மட்டுமல்அத்தனைபேரையும் கடந்து 
எனக்கு அவள் அளித்திட்ட  அந்த கரிசனத்தால்சரி என்றதும்  எங்கள் தெருவிலிருந்து ஆறு தெரு தள்ளியிருந்த  அவள் வீட்டிற்குஅழைத்துச்சென்றாள், குள்ளச்சியும் உடன்வந்தாள் வாசலில் தயங்கிநின்றிருந்த எங்களிருவரையும் கரம்பிடித்து உள்அழைத்து  தாழ்வாரத்தில் அமர்த்தி அவள் அம்மா எடுத்து  வர சில  பணியாரம்  உண்ணக்கொடுத்தாள்பின் என் தம்பிக்கும் தங்கைக்கும் தலா இரண்டிரண்டுபணியாரங்களை  வாங்கி ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிட்டாக பறந்து வீடு வந்து சேர்ந்தேன்பல  நாட்களுக்கு அந்த நினைவுகள் அந் கருப்பட்டிபணியாரத்தை காட்டிலும் தித்திப்பாய் இருந்தது.



ஒருநாள்முத்துச்சாமி சார் "இந்த மாசம் டியூஷன்பீஸ் யார் இன்னும் கொடுக்கல ...." எனக்கேட்டுஅனைவரும் கொடுத்ததை உறுதிப்படுத்திவிட்டு 
"அடுத்தவாரம் முழுப்பரிட்சை ஆரம்பிக்குதுஇந்த வாரத்தோட  
டியூஷன் கடைசி,அடுத்து  வீட்டுலயே படிச்சுககுங்க ....." என்றார்.
பரீட்சை நாளைத்தவிர பிறநாளில் உமாவை பார்க்க முடியவில்லை
பரிட்சையும்  முடிந்ததுபின் ரெண்டு மூன்று நாட்களுக்கொருமுறை
அவள் வீடிருக்கும் தெருவழி செல்வேன்கதவுதிறந்திருக்கும். ஆனால் அவள் கண்ணில் படவில்லை.உள்ளே சென்று  கேட்கவும்  பெரும் தயக்கம் பயம்அவுங்க அம்மா எதுக்குன்னா என்ன சொல்றது? பதிலேதும் தெரியவில்லை.


எனது அப்பா,நான் லீவ்ல சும்மாயிருக்கக்கூடாது, ஏதாவது கைத்தொழில் 
ஆர்வம்  வரவேணுமென ரேடியோ டிவி மெக்கானிக் கடையில் எடுபிடியாக சேர்த்துவிட்டார்.கிழே தவறி விழும் நட்டு,ஸ்குரூ தேடியெடுக்க, 
டெலிவரி டிவி, ரேடியோ துடைத்து வைக்க,வேளாவேளைக்கு டீ வாங்கிவர பயன்பட்டேன்எப்போதும் முத்துச்சாமி சார் வீட்டை கடந்துதான் எங்கள் வீடிருக்கும் தெருவிற்கு  போவேன். ஒருநாள் நான் வீட்டை கடக்கும்போதுவாசலில் நின்றிருந்தவர்
"டேய் இங்கவாடா... பரீட்சை ரிசல்ட் நாளைக்கு காலைல ஸ்கூல்ல வாசல்ல ஒட்டிருவாங்க நம்ம வகுப்பு பசங்கள பாத்தா போய் பாக்க சொல்லு நான் HMரூம்ல லிஸ்ட் பாத்துட்டு வந்துட்டேன். நம்ம வகுப்புல எல்லோரும் பாஸ்..."
"சீனிஅருண்வெங்கடேஸ்வரி எல்லாம் பாஸயிட்டாங்களா சார் ...?,
பாஸ்தாண்ட ....."
 " உமா ....."
"எல்லோருமே பாஸ் தாண்டா எருமை ....."
என் சந்தோசத்திற்கு அளவில்லை,ஆனால் குண்டன்அருண் என்னைவிட மக்கு எப்படி பாஸ்  ஆனான்? இப்போது அது முக்கியமில்லை.
உமா வீட்டிற்கு செல்லவும்அவளை பார்த்து பேசவும் நல்லதொரு
வாய்ப்பு.உமாவும்  பரிட்சையில் பாஸாயிட்டா என்ற அதிகாரபூர்வ   செய்தியுடன்  கை கால்கள்  பரபரக்க அவள்வீடு நோக்கி என் 
ற்பனை பைக் - கிளப்பிக்கொண்டு "டுர்ர்ர் .......டுர்ர்ர் ......."   மூச்சிறைக்க ஓடியஓட்டம் அவள் வீட்டு வாசலில்தான் நின்றது. கதவில்தொங்கும் 
பூட்டை பார்த்துக்கொண்டு நான் நிற்பதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு  
திண்ணை பாட்டி "யாருபா நீ ..."  என்றாள் 
"பாட்டி இங்க உமாவ பாக்கணும் ...நானும் உமா வகுப்புதான்நாங்க   எல்லோருமே  பாஸயிட்டோம்,  அதை சார் எல்லார்ட்டயும் சொல்ல சொன்னாரு ...."
"அவுங்க அப்பாவுக்கு வேற ஊர்ல வேல மாறிடுச்சாம் போன வாரமே 
வீட்ட காலி பண்ணிட்டு போய்ட்டாங்க ....இனி வர மாட்டாங்க " என்றாள்
அதுவரையான உற்சாகம் மொத்தமும் வற்றிவிட்டது,அதன்பின் 
அவளை பார்க்க முடியாததை நினைத்து அதன்பின்  ப நாட்கள் 
கண்கலங்கியிருக்கிறேன்.

மேல்நிலை வகுப்பில் வந்து சேந்த" உமா"க்கள் 
கல்லூரியில் கண்ட "உமா"க்கள் 
வேலைதேடும் காலத்தில்  எதிர்பட்ட " உமா"க்கள் 
வேலையில் எதிரிலமர்ந்த "உமா"க்கள் 
தினசரிகளில், தொலைக்காட்சிகளில் பார்க்கும் 
போட்டிகளில் வென்ற..... 
போட்டித்தேர்வுகளில் வென்ற .....
சமையல் குறிப்பெழுதிய ....
கலெக்டர் ஆனா ....
விபத்தில் சிக்கிய .....
"உமா"க்கள் யாருமே அவளில்லைதான்
என்முதல் பிரியத்தைநட்பைஅன்புணர்வின்  உற்றுக்கண்ணை  திறந்து கொடுத்தவளை முப்பது ஆண்டுகளில் வாழ்வின் வழியெங்கும் 
மீண்டும் சந்திக்கமுடியவில்லை.

"குரோம்பேட்ட வெளியவா …" வை தொடர்ந்து நடத்துனரின் விசில்  என் நினைவு கலைக்க, ஜன்னலில் வழி  இந்நிறுத்ததில் இறங்கிநடக்கும் உமாவைபார்த்தேன்,சாயல்  ஒன்றவில்லைதான், இனிமேலும் அடையாளம்காண முடியாததெனினும், உமா எனும் பெயர் கொண்ட பெண்கள் என்னைக்கடக்கும் போதெல்லாம்  ஒரு கணம் அவளை தேடித்தோற்பதுவழக்கமாகிவிட்டதெனக்கு.  

யா. பிலால் ராஜா