Tuesday, August 2, 2011

அமைதி எப்படி இருந்தது தெரியுமா...?

This Poem publised in literary e-magazine "Uyirosai" (uyirmmai publications)01-08-2011 issue http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4607



அமைதி எப்படி இருந்தது தெரியுமா...?



ஒரு நீண்ட பேருந்து பயணத்தில்
 உறக்கம் களைந்து என் அருகில் பார்த்தேன்
உறங்கிக்கொண்டிருந்தது ஒரு பெண் ஓவியம்
அந்த உறக்கத்தின்  அமைதி எப்படி இருந்தது தெரியுமா ?
மனிதர்களற்ற ஒரு பள்ளத்தாக்கைப்போல....
மழைக்கு பிந்திய கால்பந்து மைதானம் போல....
இரையுண்ட மலைபாம்பின் இடப்பெயர்வைப்போல....
மரணம் நிகழ்ந்த வீட்டின் மறுநாளைப்போல....
கலவரம் ஓய்ந்த கடைதெருவைப்போல....
மதம் தீர்ந்த ஒரு யானையின் நடையைப்போல....
விடுமுறை நாட்களில் அலுவலகம் போல.....
முதியோர் இல்லத்தின் ஒரு பகல் பொழுதைப்போல....
ஒரு பனித்துளி நீராவதைப்போல......
ஒரு நீர்த்துளி ஆவியாவதைப்போல....
பின்
ஓவியத்தின் உறக்கம் கலைத்து 
அதன்  பெயர் கேட்டேன்
உன் பெயர் சொன்னது
பின்  
உன் உறக்கம் கலைத்து 
உன்  பெயர் கேட்டேன்
ஓவியத்தின் பெயர் சொன்னாய்.

-யா. பிலால் ராஜா