Tuesday, October 12, 2010

ஊரில் இல்லாத நாட்களில்






என்னால் மட்டும் வீடு திறக்கப்படுகிறது 

உலராத என் ஆடைகளின் ஈரத்தை
அறையின் வெக்கை தின்று கொண்டிருக்கிறது

நேரமும் சோப்பும் மெதுவாகத்தான் கரைகின்றன

கேட்கப்படுவதற்கு என்னைத்தவிர அவளும் இல்லாததால்
அறைக்குள் குழப்பத்துடன் அலைந்து கொண்டிருக்கிறது
பிரியத்துடன் நாங்கள் கேட்கும் பாடலொன்று

 அவ்வப்போது கடிகாரம் மின்விசிறி போலவும்
மின்விசிறி  கடிகாரம்     போலவும் சுற்ற கனாக்கண்டேன்

 கழுவாத தேநீர்  கோப்பைகள் என்னைப்பார்த்து
எப்போதும் தங்களுக்குள் எதோ பேசிக்கொள்கின்றன

நாட்கள் நாட்காட்டிகளில் நிரம்பிவழிகிறது
குப்பைக்கூடை இன்றும் கூட  நிரம்பவில்லை
 
அவள் வரைந்து வைத்த சித்திரத்தாளில்
 சிலந்திவலை பிண்ணிக் கொண்டிருக்கிறது - கலைக்கவில்லை

சமையல் சமைப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறது

 மெழுகுவர்த்திகள் கொளுத்தாமலே உருகி வழிந்தன 
மழையும் மனைவியும் ஊரில் இல்லாத நாட்களில் ......  

பிலால் ராஜா

5 comments:

  1. Nallaa irukku...... Aanaa..
    .
    .
    .
    .
    Soap karaya maatengidha ? wife illadhappa.. yov.. nee yeppayumae sariya kulikka maattae... pinna yeppudiya karayum ?


    adhu yen boss.. mazhaya yellaa kavidhayilayum puguthiyaae aaganuma ?

    Lal.

    ReplyDelete
  2. unga vazhkaila soap wife vandhathukku apramthan karai arambichathu (kalyanathukku apramathan kulikka arambichen)ngratha ivlo vetta velichama sollanuma....?


    anyway,athai neenga sonna kavithai Nayam nalla irukku...

    ReplyDelete
  3. நாட்கள் நாட்காட்டிகளில் நிரம்பிவழிகிறது... adadadaa.. superyaa...

    ReplyDelete