Tuesday, October 12, 2010

சிதறும் சந்தேகங்கள்

 


"கடிகாரம், காலம் பற்றி அறியுமா?

எந்த நீராவது வேரின் முகவரி தேடி இருக்குமா?
நிறைவேராத பிரார்த்தனைகள் எங்கு சென்றிருக்கும்?
முதல் மனிதனின் கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்?
மரங்களை போல் மலைகளுக்கும் வேர் உண்டா?
சாமிக்கு உடைத்தாலும் சமையலுக்கு உடைத்தாலும் ஏன்
ஒரே நாளில் தேங்காய் அழுகிவிடுகிறது?
சூரியனுக்கு நிழல் உண்டா?
தான்  வளர்த்த மரத்தை எந்த வேர்களாவது
வெளிவந்து பார்த்தது உண்டா?
நிறங்கள் ஏதும் அற்ற நிறம்தான் கருப்பா?
குனிந்தபோது சட்டையிலிருந்து சிதறிய சில்லரையாய்
எதிர்பாராமல் ஓடுகிறது என் சந்தேகங்களும்…”


பிலால் ராஜா

No comments:

Post a Comment