Friday, August 30, 2013

மகன்

மகன்

என் ஆன்மாவின் பிரதிபிம்பம் 
என் உருகிய உயிரின் உறைநிலை உரு 
ஒரு அடர் வெண்மேகத்துண்டு
ஒரு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்  கவிதை
எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஆகச்சிறுவடிவம்
மழலைச்சொல் மொழியும் ஒரு மவுனம்
தவழத்தெரிந்த ஒரு புன்னகை
அழுகைபுரியும் ஒரு மகிழ்ச்சி
உடைதரித்த ஒரு உள்ளங்கைக்கனவு
சுவாசிக்கும் ஒரு கிரகம்
கண்காணக்கூடிய ஒரு வரம்
உறங்குகிறது மகனாய்
என் தோளில்

யா. பிலால் ராஜா

2 comments:

  1. Innamum niraiya ethirpaarkkirom!!!! will comment later!!!!
    -bala--

    ReplyDelete
  2. இளையராஜா இசையமைத்திருந்தா ஓம் சிவோகம் படல் மிகவும் பிரிமிப்பன படைபு தங்கள் இசை அமைத்து படியா படல் இசை மிகவும் உடலில் ஒரு இணை புரியாத ஒரு உணர்வு மிகவும் சந்தோசம் இன்னும் பல பாடல்களுக்கு இசை அமைத்து மேலும் பல வெற்றிகளையும் பல சாதனை புரிந்து வர என் மனம் மிகுந்த பாராட்டுக்கள்

    ReplyDelete