மகன்
என் ஆன்மாவின் பிரதிபிம்பம்
என் உருகிய உயிரின் உறைநிலை உரு
ஒரு அடர் வெண்மேகத்துண்டு
ஒரு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கவிதை
எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஆகச்சிறுவடிவம்
மழலைச்சொல் மொழியும் ஒரு மவுனம்
தவழத்தெரிந்த ஒரு புன்னகை
அழுகைபுரியும் ஒரு மகிழ்ச்சி
உடைதரித்த ஒரு உள்ளங்கைக்கனவு
சுவாசிக்கும் ஒரு கிரகம்
கண்காணக்கூடிய ஒரு வரம்
உறங்குகிறது மகனாய்
என் தோளில்
யா. பிலால் ராஜா