Monday, December 26, 2011

பிராத்தனையின் இசை (பாகம் - 2)

This Article published in e-magazine "Uyirosai"(uyirmmai publications)26-12-2011 issue
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5126

பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல்
  இந்த வாரம் ஹிந்தி திரைபடங்களில் மட்டுமல்லாது, தமிழ் மொழியின் வழியான சூஃபிஇசையின் வடிவங்களையும் அதன் மூலங்களையும்
 சற்று  பார்க்கலாம்.


 2009 -ல் ராகேஷ்  ஓம்பிரகாஷ் மெஹ்ரா வின் டெல்லி-6 படத்தின்"அர்ஸியான்"
என்ற பாடலை கைலஷ்கர் , ஜாவித் அலி, குரலுடன் தபலா வும் ஹார்மோனியமும்
கூ ட்டணியிட்டு சூஃபி பாடல் கேட்பை கொண்டாட்டமாக மாற்றினர். ( பாடகர் கைலஷ்கரின் ஆளுமை பற்றி  என் வலைபக்கத்தில்  சிறு பதிவிட்டிருக்கிறேன். http://bhilalraja.blogspot.com/2010/11/kailash-kher.html  )
ரஹ்மான் இசையமைத்த மிக நீண்ட பாடல்களில் இதுவும் ஒன்று (8 .50 நிமிடங்கள்).



ARZIYAN - http://www.youtube.com/watch?v=McYnZj-EvL4
          சில மசூதி மற்றும் தர்காகளில் தொழுகை முன்னறிவிப்பிற்கு  முன் பெரிய முரசு கொண்டு ஒலி எழுப்பக்கேட்டிருக்கிறேன்.  அத்தகைய முரசொலியின்  தாள பின்னணியில்  Bose: The Forgotten Hero (2005)  படத்தில்  ரஹ்மான் தன் குரல் மற்றும் தாளம் கொண்டு உருவாகிய "ZIKAR " என்ற பாடல் மிக அபூர்வமானது.


  
ZIKAR -  http://www.youtube.com/watch?v=XQtE6JQGjlI&feature=related
"மங்கள் பாண்டே" படத்தின் இசை தொகுப்பில் உள்ள பிரபலம் அடையாத  "Al Maddath Maula "  என்ற பாடலும் இறைநேசர்களின் அடக்கஸ்தலம்  என்றழைக்கப்படக்கூடிய தர்காக்களின் பின்னணியில் அமைந்தது.

Al Maddath Maula  -http://www.youtube.com/watch?v=QkK84M6lg5E


      இந்திய இசையின் நவீனத்திற்கும்,தொழில்நுட்பத்திற்கும்அடையாளமான 
ரஹ்மான், தான் இசையமைத்த நேரடியான சூஃபி பாடல்களுக்கு எளிமையாக   சூஃபி பாரம்பரிய இசைக்கேயுரிய தபலா, நரம்பிசை மற்றும்  ஹர்மோனியதிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்காரணம், அவர் சூஃபி இசை மரபை சரியாக  உள்வாங்கி/உணர்ந்திருப்பதால்தான்.
சினகிதனே...(அலைபாயுதே), என்னுயிரே., (உயிரே), therbina ...(குரு)  இவைகளின் மூலமும் சுபி இசைதான், ஆனால் இந்திய சினிமா சம்பவங்களுக்கு பொருந்தும்படி உரு(இசை) மாற்றம் செய்திருப்பார்.

ரஹ்மானிடம் தற்போது  சராசரி சினிமா பாடலுக்கான  புனைவுப்புதுமை குறைந்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த ROCKSTAR படத்தின்  "குன் பாய குன்", பாடல்  ஜாவேத்  அலி,    மொஹித் சாஹன், ரஹ்மான் குரலில் சூஃபி இசை வரிசையில்  தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது .
இந்த பாடலை டெல்லியில் ஒருநேரடி மேடை நிகழ்சியில் ரஹ்மான் குழுவினரோடு பாடும் கண்ணொளி கீழ் காணும் சுட்டியில் ரசிக்கலாம்.





இக்கட்டுரையில் இதுவரையிலான களமும்,சூஃபி பாடல்களும்  வடஇந்தியா  மற்றும் இந்துஸ்தானி இசையின் கலாச்சாரத்தில் நிலைகொண்டவை,
தென்பகுதியிலும், தமிழகத்திலும் சூஃபிதுவம் பரவியபோது, அதனுடன் இசையும் வளந்தது குறிப்பாக தமிழகத்தில் நாகூர், மதுரை பகுதியில் சூஃபி த்துவங்களையும், சூஃபி  கலைஞர்களின் வாழ்வை இசை வடிவில் பாடி யாசிக்கும் பஃக்கீர் என்ற பிரிவினர் வசிக்கின்றனர். சூஃபி கலைஞர்களின்
நினைவிடங்கலான தர்காக்கள்தான் இவர்களின் இசை மற்றும்  வாழ்வியல்  மையங்கள்.(சுஃபி பாதைகளை குறிக்கும்  "தரிக்கா" என்ற சொல்லிலிருந்து
 உருவானது தர்கா என்ற சொல்).  இவர்கள் பெரும்பாலும் பச்சை நிற தலைப்பாகையுடன்(உருமாகட்டு) கையில் தாயிரா என்ற தோல் இசை கருவிகொண்டுபாடியபடி  தெருக்களில் யாசிப்பதுதான் இவர்கள் தொழில். சமுகத்தில் பெரும்பான்மை /வைதிக இஸ்லாம் சார்பாளர்கள் சூஃபியிசத்தை
பின்பற்றுபவர்களை  ஒருவித எதிர்ப்புணர்வுடன் அணுக காரணம், இவர்கள் இஸ்லாத்தின்  முக்கிய கடமைகளில் ஒன்றான தொழுகையை காட்டிலும்,
ஜியாரத், திஃக்ர்  போன்ற ஆழ்நிலை தியான வழிபாட்டில் ஆர்வம்கொண்டவர்கலாக
இருப்பதுதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை பஃக்கீர்களின் பாடல்களில் முக்கிய பாடுபொருள் சூஃபியிசதின் முனோடியாக கருதப்படும் அப்துல் காதர் ஜிலானி, மற்றும் நாகூர் சாகுல் ஹமிது இவர்களின் வாழ்வும், அற்புதநிகழ்வுகளும்தான்.  தமிழ்நாட்டில் முக்கிய ஆன்மிக தளமான நாகூர் தர்காவில் அடங்கியுள்ள சாகுல் ஹமீது முகம்மது நபியின் 23 -ம் பரம்பரரையை  சேர்ந்தவர்,  உ.பி.யில் மாணிகபுரில்  புலம்பய்ர்ந்து  வாழ்ந்த பெற்றோருக்கு மகனாக  பிறந்து கிழக்காசிய நாடுகளில் நீண்ட பயணம் செய்தபின் சவுதியிலிருந்து  கேரளா வழியாக தமிழகத்தின் கடற்கரை நகரான நாகூர் வந்து சேர்ந்தார்.  பல அற்புதங்களை நிகழ்த்தியவரென்று  சொல்லப்பட்டாலும்  தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரை கடும் பிணியிலிருந்து காப்பாற்றியதால் இப்போதுள்ள தர்காவும் அதன் பகுதிகளும் இந்த சூஃபி ஞானிக்கு தஞ்சை அரச வம்சத்தல் எற்படுதிக்கொடுக்கப்பட்டது. இந்தகைய நாகூரின் பின்னணியில் சமீபத்தில் இணையத்தில்கேட்க நேர்ந்த அப்துல் கனி,அஜாஹ் மைதீன்,  சபுர்மைதீன் பாபா சபீர்
என்ற மூவரின் குரலில் இந்த எளிய   மற்றும்  அற்புதமான பாடல்களை கேளுங்கள், தமிழகத்தில் பஃக்கீர்களால் பாடப்படும் பாடல்கள் எந்த சம்பிரதாய அல்லது மரபியல் இசை வடிவிற்கும் கட்டுப்படாத எளிய நாட்டுப்புற இசையை போன்றது.
(இதுவரை இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட மற்ற பாடல்களை
கேட்காவிட்டாலும், கீழ் குறிப்பிடும் பாடல்கள் தவறவிடவேண்டாம்)



http://www.youtube.com/watch?v=wXfPFxfy7ZM&feature=related


http://www.youtube.com/watch?v=VJH8rYn-ERY&feature=related

இவ்வகை பஃக்கீர்களின் இசை பாடலை இணையத்தில்மட்டுமல்லாது நேரடியாகவும் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களின் வாழ்வு
வறுமையில் நிலைகொண்டிருந்தாலும்,  இசைக்கத்துவங்கியதும்,  அவர்கள்   கண்களின்  வழி நம்பிக்கை மட்டுமே  இசையையும்  மீறி வழிகிறது. 

இக்கலைஞர்களின்    அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய பிராத்தனையிசையில்   சரணடையும்  நோக்குதான்,  எந்தவித சிறப்பு இசை பயிற்சியும், குரல் வளமும் இல்லையென்றாலும் நம்மை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது.

யா. பிலால் ராஜா.

No comments:

Post a Comment